சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை!
ADDED :4329 days ago
சபரிமலை: சிவகங்கை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதி சார்பில், சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாஸ்கரன் குருசாமி தலைமையில், பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதியை சேர்ந்த 275 பக்தர்கள், இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு வந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்த பின், மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில், 200 க்கும் மேற்பட்ட விளக்குகளில் தீபம் ஏற்றி, அதை சுற்றி அமர்ந்து பஜனை பாடினர். சபரிமலைக்கு, வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காக, இந்த பூஜை நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு தங்கள் குழுவில் 51 கன்னி பக்தர்கள் இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக சன்னிதானத்தில் விளக்குபூஜை நடத்தி வருவதாகவும், பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.