முத்துமாரியம்மன் கோயிலில் சப்பரப் பவனி
ADDED :4316 days ago
தச்சமொழி: முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி சப்பரபவனி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயிலில் அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரகார வீதிஉலா வந்தார்.