தீவனூரில் பெருமாள் கோவிலில் திருவோண தீபம்!
ADDED :4302 days ago
திண்டிவனம்: தீவனூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தை மாதத்திற்கான திருவோண தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. தை மாதத்தில் அமாவாசையன்று, திருவோண நட்சத்திரம் வருவதால் அன்று தீவனூர் பெருமாள் கோவிலில் ஏற்றப்படும் தீபத்தை வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.