கடவுளை உருகி வழிபடுபவர் கூட சோதனையால் வருந்துவது ஏன்?
ADDED :4415 days ago
பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்பார்கள். முன்செய்த வினைப்பயனால், வாழ்வில் பலவித சோதனைகள் உண்டாகின்றன. அதன் தீவிரம் குறைய கடவுளின் திருவடியை உறுதியாகப் பற்றுவது ஒன்றே வழி. நம்பியவர் கெட்டதில்லை, வடிவேல் அறிய வஞ்சகமில்லை, சிவாயநம என சிந்தித்திருப்போருக்கு அபாயமில்லை,வேலுண்டு வினையில்லை போன்ற வாசகங்களை எப்போதும் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள்.