சித்தலூரில் மயானக் கொள்ளை : இன்று தேரோட்டம்
ADDED :4266 days ago
தியாகதுருவம்: விழுப்புரம் மாவட்டம் சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் மாயான கொள்ளை திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்கிறது.கடந்த மாதம் 27-ம் தேதி கொடியயேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து இன்று தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக மணிமுக்தா ஆற்றங்கரையில் மண்ணால் செய்யப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.