உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி குருபகவான் கோவிலில் சங்காபிஷேகம்

ஆலங்குடி குருபகவான் கோவிலில் சங்காபிஷேகம்

நீடாமங்கலம், -: திருவாரூர் ,நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு தட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியுடன் அருள்பாலிக்கிறார்.  எனவே இக்கோவில்  குருபகவானுக்குரிய பரிகார தலமாக  உள்ளது. . இக்கோவிலில் மாசி மகா குருவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.  காலை 9 மணி அளவில் சிறப்பு யாகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் குருபகவானுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் பூர்ணாஹுதி பூஜை நடந்தது.
 தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !