கருமாரியம்மன் கோவிலில் நாளை அம்மன் அழைப்பு
ADDED :4171 days ago
மேட்டுப்பாளையம்: சக்தி விநாயகர் கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன.தேவி கருணமாரியம்மன் கோவில் விழா நடந்த மாதம் 25-ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இம்மாதம் முதல் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாளை (8-ம் தேதி) இரவு 9 :00 மணிக்கு அம்மன் அழைப்பும், 9-ம் தேதி கலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் மாவிளக்கு படைத்தலும் நடக்கிறது. வரும் 10-ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 13-ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து வருதலும் , 14-ம் தேதி தமிழ் வருட பிறப்பு சிறப்பு பூஜையும், 15-ம் தேதி கிரிமலைக்கு புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.