உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

செல்வ விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

புதுச்சத்திரம்: சிலம்பிமங்களம் செல்வ வினாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,  பூர்ணாகுதி, தீபாராதனையும், 12:00 மணிக்கு கன்னிமார்கள் சிலை, கரிக்கோலம், கண் திறப்பும் நடக்கிறது.  மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்பணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (9ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடிசந்தானம், 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 10:00 மணிக்கு விமானம், கன்னிமார்கள் கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு செல்வ வினாயகருக்கு கும்பாபிஷேகம், 11.00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !