வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4337 days ago
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வெண் மணியில் வரசித்தி விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந் தது. கலசங்களில் புனிதநீர் வைத்து யாகசாலை பூஜைகளும் நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.