அகத்தீஸ்வரர் கோவிலில் நால்வர் குரு பூஜை விழா
ADDED :4379 days ago
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே உள்ள ஆண்டிமடம் விளந்தை மேல் அகத்தீஸ்வரர் கோவிலில் நால்வர் குரு பூஜை விழா நேற்று முன்தினம், 28ம் தேதி நடந்தது. குரு பூஜை முன்னிட்டு அகத்தீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, முருகன் மற்றும் நான்கு நாயன்மார்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.