ஏம்பலம் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா
ADDED :4149 days ago
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் ஈயகுணம் , ஏம்பலம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. ஊராட்சி தலைவர் கண்ணாயிரம் ராஜகோபால், முன்னாள் தலைவர் சங்கர், துணை தலைவர் பச்சையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மரக்கோணம் ஊராட்சி பின்னனூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலிலும் சாகை வார்த்தல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.