அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா!
ADDED :4311 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடத்தி, இரவு 8.30 மணியவில் உற்சவர் அர்த்த நாரீஸ்வரர், முத்தாம்பிகை சுவாமிகளை கோவில் வளாகத்தில் வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இன்று பகல் 3 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.