உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!
ADDED :4127 days ago
திருப்பரங்குன்றம் :உலக நன்மைக்காகவும், மாணவர்களின் படிப்பு சிறக்க வேண்டியும் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜகோபால், பொருளாளர் கோவிந்தராஜ், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜமன்னார், சுப்புராஜ், செயற்குழு உறுப்பினர் சரளா, ஒருங்கிணைப்பாளர்கள் மல்லிகா, உமா முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை கண் புரை பிரிவு தலைமை டாக்டர் ஹரிபிரியா இதை துவக்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயராமன், தர்மராஜ், மகாலட்சுமி, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசியர் டாக்டர் பாரதி பங்கேற்றனர்.