திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :4197 days ago
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், ஆவணி மாத முதல் நாளை முன்னிட்டு, சிறப்பு பூஜை, நேற்று, நடந்தது. திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி., சாலையில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று, ஆவணி மாதம், முதல் நாளை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு. ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின்னர் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர்.