உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா!

கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா!

திருத்தணி : கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. விழாவை ஓட்டி காலை, 8:00 மணிக்கு கிராம தேவதை அந்தோரியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் ஆகிய கோவில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலை, 3:00 மணிக்கு பூகரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. பின்னர், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூகரத்துடன் கங்கையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !