திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் உண்டியல் காணிக்கை!
ADDED :4044 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி துவங்கியுள்ளது. திரு நள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாரில் குவிந்து வருகின்றனர். திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தங்க தேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னதான உண்டியலும் நிரம்பியது. இதை தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.