உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்ரீத் சிறப்பு தொழுகை!

பக்ரீத் சிறப்பு தொழுகை!

புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையொட்டி, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகை பெருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில், முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். புதுச்சேரி பெரிய பள்ளிவாசல், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், எச்.எம் காசிம் முகமதியா பள்ளிவாசல், தேபேசன்பேட்டை மஸ்கிதே நுாராணியா பள்ளிவாசல், டி.எம்.நகர் மஸ்ஜிதே அஹமதியா பள்ளிவாசல்களில் காலை 7:30 மணிக்கு நடந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதேபோல் பக்ரீத் பண்டிகையொட்டி மீரா பள்ளிவாசல், குப்தா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், நுாரே ஹதயத்துல் இஸ்லாமியா பள்ளிவாசல் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

காரைக்கால்: காரைக்காலில் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளி, செய்கு மெய்தீன் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே ஹீசைனியில், மொய்தீன் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !