உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவில் உண்டியல் எண்ணிக்கை!

அண்ணாமலையார் கோவில் உண்டியல் எண்ணிக்கை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், கிரிவலம் வந்து, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனாக, காணிக்கை செலுத்துவர். காணிக்கை எண்ணும் பணி, பவுர்ணமி முடிந்ததும் நடக்கும். அதன்படி, நேற்று முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், முதல் நாள் முடிவில், 44 லட்சத்து, 50 ஆயிரத்து, 978 ரூபாய், 68 கிராம் தங்கம், 275 கிராம் வெள்ளி நகைகளும், காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று (17ம் தேதி) இரண்டாவது நாள் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !