உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி!

மேல்மலையனூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 16 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். விழுப்புரம்  மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை இந்து  சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள்  பிரகாஷ், வேதா  முன்னிலையில் நடந்தன. இதில் -16 லட்சத்து 71 ஆயிரத்து 658 ரூபாய்  ரொக்கமும், 135 கிராம் தங்க  நகையும், 125 கிராம் வெள்ளி நகையையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அறங்காவலர் தலைவர்  சரவணன், அறங்காவலர்கள்  ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன், மணி மற்றும் ஊழியர்கள் உடன்  இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !