பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மஹோஸ்தவம்!
ADDED :4088 days ago
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மஹோஸ்தவம் நடந்தது. காரைக்கால் கோவில்பத்து சுயம்வர தபஸ்வினி உடனமர் பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மகோஸ்தவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு பார்வதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து மகா தீபாரதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. காலை 10.30 மணிக்கு அரசலாற்றில் தென்கரையில் சுயம்வரதபஸ்வினியுடன் பார்வதீஸ்வரர் எழுந்தருளினார். பின், அரசலாற்றில் துலா ஸ்நாநம்(சுவாமி நீராடுதல்) நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் நீராடி சுவாமியை வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சிறப்பா செய்திருந்தனர்.