பெருமாள் கோவில் மகா சிரவண தீபம்
ADDED :3971 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா சிரவணதீபம் ஏற்றப்பட்டது. திருவோண நட்சத்திரையொட்டி ப.வில்லியனூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 27ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மூலவர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயாரோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:30 மணிக்கு மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.