உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வசதிக்காக.. பம்பை-பழநி, தென்காசி பஸ்சர்வீஸ் தொடக்கம்!

பக்தர்கள் வசதிக்காக.. பம்பை-பழநி, தென்காசி பஸ்சர்வீஸ் தொடக்கம்!

சபரிமலை: பம்பையில் இருந்து பழநி மற்றும் தென்காசிக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பஸ் சர்வீஸ் தொடங்கியது. கேரள அரசு போக்குவரத்து கழகம் தமிழக பக்தர்கள் வசதிக்காக இன்டர்ஸ்டேட் சர்வீஸ்களை தொடங்கியது. இதன்படி பழநிக்கு 2 சர்வீஸ்களும், தென்காசிக்கு 4 சர்வீஸ்களும் இயக்கப்படுகின்றன. பம்பையில் இருந்து குமுளி, கம்பம், தேனி வழியாக பழநிக்கு காலை 8 மற்றும் 9 மணிக்கு பஸ்கள் புறப்படும். மறுமார்க்கத்தில் இரவு 8 மற்றும் 9 மணிக்கு பழநியில் இருந்து பம்பைக்கு இந்த பஸ் புறப்படும். எனினும் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து நேரத்தில் மாற்றம் செய்யப்படும். பழநிபம்பை கட்டணம் 226 ரூபாய். பம்பையில் இருந்து புனலூர், செங்கோட்டை வழியாக தென்காசிக்கு 4 சர்வீஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 7 மணியில் இருந்து இந்த பஸ்கள் பக்தர்கள் கூட்டத்தைப் பொறுத்து இயக்கப்படும். இதில் கட்டணம் 140 ரூபாய். இதுபோல தென்காசியிலிருந்து மாலை 6 மணியிலிருந்து பஸ்கள் இயக்கப்படும். கோவை மற்றும் கன்னியாகுமரிக்கு பெர்மிட் கிடைத்ததும் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சென்னை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து மதுரை, குமுளி வழியாக பம்பைக்கு பஸ்களை இயக்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !