உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை ஐயப்பன் மண்டல பூஜை!

வடமதுரை ஐயப்பன் மண்டல பூஜை!

வடமதுரை : வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் மணி மண்டபத்தில் 44ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக 37 சிவ வைணவ கோயில்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. தீர்த்தகுடங்களில் ஒன்றை தலைமை குருசாமி காமராஜ் யானையின் மீது அமர்ந்தவாறும், மற்ற 36 குடங்களை மற்றவர்கள் யானைக்கு பின்புறம் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஐயப்பன் மணி மண்டபத்தில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமம், கஜபூஜை, 108 சங்கு, 108 கலச அபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் காமராஜ், ராம்தாஸ், நந்தகுமார், பிரபு உள்பட ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு பின் வடமதுரையில் யானை : ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவின் போது யானை வடமதுரைக்கு அழைத்து வரப்படும். யானை முன்னே செல்ல தேர் பக்தர்களால் இழுத்து செல்லப்படும். யானையை கொண்டு பிச்சையெடுக்க கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளால் கடந்த 10 ஆண்டுக்களாக ஆடித்திருவிழாவிற்கு யானை அழைத்து வரப்படுவது நிறுத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் யானை வடமதுரைக்கு வந்துள்ளது. இதனால் பெரியவர்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் கூட்டம், கூட்டமாக வந்து யானையை பார்த்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !