உலக நன்மை வேண்டி பஞ்சவடிக்கு பாதயாத்திரை!
புதுச்சேரி: உலக நன்மை வேண்டி, வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூட பாதயாத்திரை குழுவினர், பஞ்சவடிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.
வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூட பாதயாத்திரை குழு சார்பில், உலக நன்மை மற்றும் மக்கள் நலன் வேண்டி, பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, 11ம் ஆண்டாக பஞ்சவக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கிய பாதயாத்திரை நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை செயலர் சாரியார் சுவாமிகள், வணிக வரித்துறை உதவி ஆணையர் மதிவாணன் தலைமை தாங்குகின்றனர். வணிகவரித்துறை அதிகாரி இளங்கோவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணி ராகவன், வெங்கடேசன், சண்முகம், தேசிய ஆன்மீக பேரவை செயலர் முனுசாமி, சண்முகா சில்க்ஸ் குகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதயாத்திரை ஏற்பாடுகளை வேங்கடாசலபதி பஜனை கூட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.