நாகாத்தமன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4031 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தமன் கோவிலில் தை மாத திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மன அமைதிக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்த கூட்டு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.