உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் திருஅறை: பக்தர்கள் தரிசனம்!

வள்ளலார் திருஅறை: பக்தர்கள் தரிசனம்!

வடலுார்:மேட்டுக்குப்பம், வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத் திருமாளிகையின் திருஅறையை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம் வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், 144வது தைப்பூச விழாவை முன்னிட்டு, கடந்த, 3, 4ம் தேதி, ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட பேழையை, தருமசாலையில் இருந்து மீனவர்கள் சுமந்து, வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.வள்ளலார் சித்தி பெற்ற அறையின் முன்வைத்து, பேழை திறக்கப்பட்டது. இதை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, மதியம், 12:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !