உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள்

உயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள்

ஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்
உருவங்கொ டிருவ டிவதாய்
ஒருமூன்று தேவராய் நான்மறைப் பொருளாகி
உயர்பஞ்ச மூர்த்தி யாகிக்
குன்றாத ஆதாரம் ஆறாகி ஏழெனக்
கொளும்வியா கிருதி மனுவாய்க்
குலவட்ட மூர்த்தியாய் எண்குணம தாய்ப்பரங்
கொண்டநவ தத்து வமதாய்
இன்றாகி அன்றாகி எதிர்கால வடிவாகி
எங்கும்வி யாபி யாகி
எல்லா உயிர்க்கும் உயி ரதுவாகி யருளிநின்று
இயலுலகம் உயநி னைந்தே
சென்றாதி பரவெளி பழுத்தருட் கனிந்தநின்
செயல்சிறிது உரைக்க எளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !