ஒரே பாடலில் திருமாலின் பத்து அவதாரம்!
ADDED :3849 days ago
மீனோடு ஆமை கேழல் அரி
குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த்
தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து
அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே
மீன் - மச்சாவதாரம்
ஆமை - கூர்மாவதாரம்
கேழல் - வராக அவதாரம்
அரி - நரசிங்க அவதாரம்
குறள் - வாமன அவதாரம்
முன் இராமன் - பரசுராமன்
தான் - தசரதராமன்
பின் இராமன் - பலராமன்
தாமோதரன் - கிருஷ்ணன்
கல்கி - கல்கி அவதாரம்
இப்படி பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.