தேர்த்திருவிழா நடத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :3942 days ago
ஊரின் ஒற்றுமை சிறக்க நடத்துவது தேர்த் திருவிழா. ஊர் கூடித் தேர் இழுப்பது போல என்றே சொல்வார்கள். நால்வகைப் படைகளில் ராஜாவின் அந்தஸ்தை நிலைநாட்டுவது தேர். உலகின் ராஜாவாக இருந்து நம்மை இயக்குபவர் கடவுள். அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் கோயிலில் தேர்த்திருவிழா நடத்துகிறார்கள்.