திண்டிவனம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா!
ADDED :3941 days ago
திண்டிவனம்: திண்டிவனம் எம்.ஆர்.எஸ். ரயில்வே கேட் மாரியம்மன் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுப் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், வாசவி கிளப் துணை ஆளுனர் சிவக்குமார், வட்டார தலைவர் சங்கர், வாசவி கிளப் தலைவர் மனவளக்கலை பிரபாகரன், செயலாளர் நவநீத கிரு ஷ்ணன், பொருளாளர் நடராஜன், வாசவி கிளப் வனிதா தலைவி சந்திரகலா சங்கர், செயலாளர் கோமதி பட்டாபிராமன், பொருõளாளர் ஜெயந்தி சி வக்குமார் மற்றும் வாசவி கிளப் உறுபபினர்கள் செய்திருந்தனர்.