உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் நடந்த தங்கத்தேரோட்டம்

மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் நடந்த தங்கத்தேரோட்டம்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் நடந்தது.


முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், நாள்தோறும், 5 கால பூஜை நடக்கிறது. இக்கோவிலில், தங்கத்தேர் உள்ளதால், தினமும் மாலை, தங்க தேர் புறப்பாடு நடந்து வந்தது. இதற்கு, பக்தர்கள், 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி, முன்பதிவு செய்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில், தேர் வலப்பாதையில், கல் தளம் அமைக்கும் பணி, கும்பாபிஷேக பணி, வசந்த மண்டபம் கட்டும் பணி போன்ற வளர்ச்சி பணிகள் மேற்கொண்டதால், கடந்த, 2 ஆண்டுகளாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், நேற்று மாலை, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. இதனை, கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !