வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கூடுதல் வசதிகள்!
ADDED :3768 days ago
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராட்டினம் அமைக்கும் மைதானத்தில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. குளியலறை வசதிகளுடன் கூடிய புதிய முடிக்காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளில் இருந்து வீரபாண்டி கோயில் பகுதிகளில் உள்ள அனைத்து கழிப்பிடங்களுக்கும் குழாய் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 24 மணி நேரமும் வீரபாண்டியில் தண்ணீர் வசதி கிடைக்கிறது. ஏற்கனவே கோயில் அருகில் ராட்சத மண்டபம் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது.