மஹாருத்ர மஹாயாகத்துக்கு அழைப்பு
ADDED :3763 days ago
சேலம்: காஞ்சி காமகோடியின், மஹாருத்ர மஹாயாகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மரவனேரி, 7வது கிராஸில் அமைந்துள்ள, ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய இரண்டு நாட்கள், காஞ்சி காமகோடியின், 122வது ஜெயந்தியை முன்னிட்டு, மஹாருத்ர மஹாயாகம், மஹா சுதர்சன ஹோமம், மகா லட்சுமி ஹோமங்கள் எல்லோருடைய நன்மைக்காக நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற, மஹாருத்ர கமிட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27 முதல் ஜூன் 30ம் தேதி வரை, தினமும் மாலை 6.30 மணிக்கு மடத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.