உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: உழைப்பே உயர்வு

ரமலான் சிந்தனைகள்: உழைப்பே உயர்வு

“ஒரு சமயம், நபிகளாரிடம் வந்த ஒருவர், தனக்கு உதவுமாறு கேட்டார். அவரிடம், “உம்மிடம் உடமைகள் ஏதாவது உள்ளதா?” என்று நாயகம் கேட்டார். “என்னிடம் தண்ணீர் கிண்ணம் ஒன்றும், படுக்கை விரிப்பும் தான் உள்ளன. வேறு எதுவுமில்லை,” என்று அவர் பதிலளித்தார்.அவை இரண்டையும் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். “இவற்றை வாங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தங்கள் தோழர்களை நோக்கி கேட்டார். அதற்கு ஒருவர், இரண்டு திர்ஹம் தருவதாகச் சொன்னார். அவருக்கு நபிகளார் அந்தப் பொருட்களை விற்றுவிட்டார். பின்னர் அந்த மனிதரிடம், “இந்தாரும் இரண்டு திர்ஹம்கள். இதில் ஒரு திர்ஹமுக்கு உமக்கு உணவு வாங்கிக் கொள்ளும். இன்னொரு திர்ஹமுக்கு ஒரு துண்டுக் கயிறு வாங்கிக் கொள்ளும். காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து வந்து கடைத்தெருவில் விற்பனை செய்யும், என்று கூறி அனுப்பினார். 15 நாட்களுக்குப் பிறகு, அந்த மனிதர் வந்தார். நாயகம் சொன்னபடி செய்ததாகவும், தற்போது தம்மிடம் பதினைந்து திர்ஹம்கள் மீதம் உள்ளதாகவும், அதைக் கொண்டு கோதுமை, துணிமணி வாங்கப் போவதாகவும் தெரிவித்தார். நாயகம் அவரிடம், “எது மிகவும் போற்றத்தக்கதும், அறிவுடைமையும் ஆகும்? இதுவா... யாசகம் கேட்ட முத்திரையுடன் மறுமைநாள் சென்றடைவதா?” என்று கேட்டார். உழைக்கும் திறனுள்ளவர்கள் யாசகம் கேட்பதை கைவிட வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !