முத்துமாரியம்மன் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு
                              ADDED :3758 days ago 
                            
                          
                          காளையார்கோவில்: காளையார்கோவில் முத்துமாரியம்மன் கோயிலில், மது எடுப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கவிஞர் சீனிவாசன் சொற்பொழிவாற்றினார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழா கமிட்டி தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தேவகோட்டை பி.டி.ஓ., அன்புத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வீரமணி சாஸ்திரிகள் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார்.