பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் கலாசாபிஷேகம்!
ADDED :3941 days ago
தேவதானப்பட்டி: வைகை அணை வரதராஜ் நகர் பத்ரகாளியம்மன், விநாயகர் கோயில் கலசாபிஷேகம் நடந்தது. முதல் நாள் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், உஷ பூஜை, தீபாரானை, பகவத்சேவை, அத்தாழபூஜை, குருதி பூஜை, பிரம்ம கால பூஜை, நவகிரஹ பூஜை, பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது. பத்ரகாளியம்மன் கோயில் அறங்காவலர் தலைவர் ராஜ்ஸ்ரீபதி இயக்குனர் வரதராஜ் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை தலைவர்கள் எ.சத்தியமூர்த்தி, சி.சத்தியமூர்த்தி, பொதுமேலாளர் சதாசிவம், தென்மண்டல ஐ.ஜி., அபய்குமார்சிங், மாவட்ட எஸ்.பி.,மேகஷ், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.