தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா!
ADDED :3763 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவி மாரியம்மன் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 11.00 மணிய ளவில் 108 பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி ஏந்தி, செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.