அயன்வேலூர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :3731 days ago
உளுந்தூர்பேட்டை:அயன்வேலூர் கிராமத்திலுள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா அயன்வேலூர் கிராமத்திலுள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காப்பு கட்டப்பட்டு, தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கூழ் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.அங்கு சுவாமிக்கு படையலிட்டு தீபாராதனை செய்து வழிபட்டனர்.