கும்மிடிப்பூண்டி மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா
ADDED :3731 days ago
கும்மிடிப்பூண்டி:ஆத்துப்பாக்கம், மாரியம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். அந்த கோவிலில், ஜூலை 28ம் தேதி துவங்கி, நேற்று வரை, ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று நடைபெற்ற அம்மன் வீதியுலாவின் போது, ஆத்துப்பாக்கம் கிராமவாசிகள், வீதிதோறும் அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.