பழநியில் அன்னாபிஷேகம்
ADDED :5337 days ago
பழநி : உலக நலன், அமைதி வேண்டி பழநி பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நடராஜர், விநாயகர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பெரியாவுடையார் கோயிலில், நடராஜருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் நடராஜன், கந்தவிலாஸ் செல்வக்குமார், ஜெகதீசன், பாஸ்கரன், பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, அ.தி.மு.க., நகர் செயலாளர் பரதன், கவுன்சிலர்கள் சுரேஷ், குமார், கார்த்திகேயன், லயன்ஸ் சங்க மாவட்ட நிர்வாகி பெருமாள் பங்கேற்றனர்.