கோட்டூர் மகாகாளர்
பல்லவி
வாவா வாவா கறுப்பையா -வரம்
தாதா தாதா கறுப்பையா!
சரணம்
சிருங்கபுரம் என்னும் கோட்டூரில்
சிங்காரமாய் வீற்றிருக்கும் கறுப்பையா
எங்கள் குல நாயகரே வாவாவாவா
என்றென்றுமே இன்பம்நீ தாதாதாதா...........
சத்தியத்தின் ஜோதியே கறுப்பையா
சந்தானம் தருபவரே கறுப்பையா
பக்தியுடன் வணங்கினேன் கறுப்பையா - உன்
பதமலர் தரவேணும் கறுப்பையா!
படிபதினெட்டும் கறுப்பையா
பந்தள நாட்டில் நீ இருப்பையா
பாபங்கள் நீக்கநீ வாவாவாவா
பலகலை ஞானம்நீ தாதாதாதா!
இந்திராணி காவலனே கறுப்பையா
எங்கள்குடி காப்பவனே கறுப்பையா
மந்தாரம் வனம்நோக்கி வாவாவாவா
மகிழ்ச்சியை என்றும்நீ தாதாதாதா!
நல்லவர்க்கு வடிவான நாயகமே
அல்லவர்க்கும் வடிவான தாயகமே
நாயகியாள் சௌந்தரம்நீ வாவாவாவா
நயினாரே நன்மைகளைத் தாதாதாதா!
பாருக்கு வாழ்வளிக்கும் கறுப்பையா
காருக்குக் கைகொடுக்கும் கறுப்பையா
கவலையை நீக்க வாவாவாவா - உன்
கருணையை என்றும் நீ தாதாதாதா!