உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிேஷக பூஜைகள் நடந்தன. அக்கோவிலில், நேற்றுமுன்தினம் கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், எலுமிச்சை, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜையும், காலபைரவருக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து வழிபட்டனர்.

ஆனைமலை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அங்கலகுறிச்சி கோபால்சாமி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள காலசம்ஹார பைரவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆனைமலை அருகே உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் திருக்கோவில். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இங்கு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பைரவர் மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு, பால் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் வெண் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். மாலையில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள், எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டனர். மகா அபிேஷகம் முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !