உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!

கஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க!

பிறரிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? அவை, பணம் கொடுக்கல், வாங்கல், வீட்டு பிரச்னை, செய்த  தானம், அடைந்த புகழ், ஏற்பட்ட அவமானம் ஆகியவை. இவற்றை வெளியில் சொன்னால் என்னாகும்?

* நாம் பலவீனர்கள் ஆவோம்.
* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.
* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில்  பின்னடைவை ஏற்படுத்தும்.
* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும்,  மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.
* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து  சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.
* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று,  நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !