சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்!
ADDED :3876 days ago
திருநகர்: மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, லட்சார்ச்சனை துவங்கியது.காலையில் உற்சவர் சித்தி விநாயகர் முன் மகா கணபதி ஹோமம் முடிந்து, மாலையில் லட்சார்ச்சனை துவங்கியது. செப்.,16 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. செப்.,17 காலை மகா கணபதி ஹோமம் முடிந்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கும். திருவிழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பார்.