முதியோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளை எப்படி திருத்தலாம்?
ADDED :3769 days ago
காலத்திற்கேற்ப பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். பழம் பஞ்சாங்கமே பாடிக் கொண்டிருக்க கூடாது. மருமகள் நமது அடிமையல்ல என்று நினைத்து விட்டாலே போதும். அந்தப் பெண்ணால் குடும்பத்தில் பிரச்னை வராது. மருமகளிடம் பிரச்னை செய்ய செய்யத் தான், அவள் கணவரிடம் சொல்லிக் கொடுத்து பெற்றோரை ஒதுக்கச் சொல்வாள். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சில வீடுகளில், பொறுமையான மாமனார், மாமியாரைக் கூட பணம் உள்ளிட்ட காரணங்கள் கருதி ஒதுக்கச் சொல்லும் மருமகள்களும் இருக்கிறார். சூழ்நிலை காரணமாகவே பிள்ளைகள் பெற்றோரை ஒதுக்குகிறார்கள். இருதரப்பும் மனதளவில் திருந்த வேண்டும். பிள்ளைகளை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது.