குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா!
ADDED :3672 days ago
புதுச்சேரி: திருவள்ளுவர் நகர் (டிவி நகர்) சாலை வசந்த நகரில் உள்ள குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் நேற்று குரு பூஜை விழா நடந்தது. காலை 10:30 மணியளவில் கணபதி பூஜை, 11:00 மணிக்கு தேவாரம் படித்தனர். பின், சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை, பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வேலாயுத ஈஸ்வரர் ஆலய விழாக் குழுவினர் செய்திருந்தனர்.