முளைப்பாரி விழா!
ADDED :3643 days ago
ராமநாதபுரம்: மண்டபம் மறவர் தெரு ஆதி முத்து மாரியம்மன், ஐ.என்.பி., காலனி வீரசக்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா கடந்த 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. அக்., 13 இரவு அம்மன் கரகம் கடற்கரையில் இருந்து எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தது. அம்மன் கரகம் நேற்று காலை பக்தர்கள் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், பால்குடம், அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் கடலில் கரைக்கப்பட்டது. இரண்டு நாள் இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில், விழாக்குழுவினர், இளைஞரணியினர் செய்தனர். இக்கோயில்களில் வரும் 20ல் குளுமை பொங்கல் விழா நடக்கவுள்ளது.