திருத்தணி ஷீரடி சாய் பாபா கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3642 days ago
திருத்தணி: ஷீரடி சாய் பாபா கோவிலில், நேற்று பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள, ஷீரடி சாய் பாபா கோவில்களில், புரட்டாசி மாத வியாழக்கிழமையை ஓட்டி, நேற்று, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை ஓட்டி, காலை 10:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சாய் பாபாவிற்கு, வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.