உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

தொண்டி:தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நைனாமுகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. அதிகாலை 3 மணிக்கு எஸ்.பி.பட்டினம் மாணவநகரி கிராமத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு சந்தணக்கூடு ஊர்வலம் புறபட்டது. ஸ்தானிகன்வயல் வழியாக பாசிபட்டினம் தர்காவை அடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தர்கா மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. தினமும் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !