பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமிபூஜை
ADDED :3684 days ago
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் வடமாலை சாத்தி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் குருக்கள் திருஞானசம்பந்தர், பாலசுப்பிரமணியம் செய்தனர்.